Monday 24 December 2012

நமது கர்மங்களைத் தீர்க்க ஒரு அரிய வாய்ப்பு




நமது கர்மங்களைத் தீர்க்க ஒரு அரிய வாய்ப்பு
நமது கர்மங்களைத் தீர்க்க ஒரு அரிய வாய்ப்பு

இன்று புரட்டாசி மாத அமாவாசை;(7.10.2010 வியாழன்).இன்று நள்ளிரவு சுமார் 1.40 மணி வரையிலும் அமாவாசை இருக்கிறது.இந்த நாளை நமது முற்பிறப்புப் பாவங்கள்,கர்மங்களை அழிப்பதற்கான ஆரம்பநாளாக வைத்துக்கொள்வோம்.

நாம் செய்ய வேண்டியது என்னவெனில்,கதர்க்கடைக்குச் சென்று ஒரு ருத்ராட்சம் வாங்கிக்கொள்ளவேண்டும்.விலை ரூ.30 முதல் ரூ.100க்குள் இருக்கும்;மஞ்சள் நிற துண்டு இரண்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.ஒரு சாதாரண மஞ்சள் துண்டு விலை ரூ.25 லிருந்து ஆரம்பமாகும்.உங்கள் ஊரிலிருக்கும் ஏதாவது ஒரு சிவாலயம் சென்று சிவனை வணங்கி,கொஞ்சம் விபூதி வாங்கி வரவேண்டும்.
இன்று முதல் எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது;எந்த உயிரையும் துன்புறுத்தக்கூடாது;இந்த இரண்டு கொள்கைகளை கட்டாயம் பின்பற்றவேண்டும்.அப்படிப் பின்பற்றினால்தான்,நமது பாவங்கள் தீரும்!!!

இன்றிரவு தூங்கும் முன்பு,நமது வீட்டில் கிழக்கு நோக்கி அல்லது வடக்குநோக்கி அமரும் விதமாக மஞ்சள் துண்டினை விரிக்க வேண்டும்;இன்னொரு மஞ்சள் துண்டினை இடுப்பில் கட்டிட வேண்டும்.கழுத்தில் ருத்ராட்சத்தை அணிய வேண்டும்.எந்த முக ருத்ராட்சமாகவும் இருக்கலாம்;(செல்போன்,டிவி,தொலைபேசி,காலிங் பெல்லை அணைத்துவிடவும்;அல்லது சைலன் ட் மோடில் வைக்கவும்)சிவாலயத்தில் கொடுத்த விபூதியை நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும்.முதுகு நேராக இருக்குமாறு கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமரவேண்டும்.ஆழ்ந்து மூச்சுவிடவேண்டும்.ஒரு முறையல்ல;குறைந்தது 9 முறை!

முதலில் விநாயகரை நினைத்து வழிபட்டுக்கொள்ள வேண்டும்;அடுத்ததாக நமது குல தெய்வத்தை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும்;மூன்றாவதாக நமது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டும்.(குலதெய்வம் தெரியாதவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை நினைத்து வழிபட்டுக்கொள்ள வேண்டும்)அதன் பிறகு,கண்களை மூடிக்கொள்ள வேண்டும்.
ஓம் சிவசிவ ஓம்; ஓம் சிவசிவ ஓம் என தொடர்ந்து அரை மணிநேரம் வரை ஜபிக்க வேண்டும்.அரை மணி நேரத்துக்குப் பிறகு,மஞ்சள் நிறத்துண்டிலிருந்து எழுந்து,ருத்ராட்சத்தைக் கழற்றி வைக்கவும்;மஞ்சள் துண்டுகளை மடித்து பத்திரப்படுத்தவும்;எக்காரணம் கொண்டும் அவற்றை நீரில் நனைக்கக் கூடாது;இந்த விபூதி,ருத்ராட்சம்,மஞ்சள் துண்டுகளை யாருக்கும் எப்போதும் எதற்காகவும் தரக்கூடாது;


இதே போல்,தினமும் காலை அரைமணி நேரம்,மாலை அல்லது இரவு அரை மணி நேரம் செய்து வரவும்.100 நாட்களில் நமது நீண்ட காலப்பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

இந்த 100 நாட்கள் மட்டுமல்ல;தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் இந்த ஒரே ஒரு வழிபாட்டுமுறையைப் பின்பற்றவும்.

குழந்தைப்பிறந்த அன்றும்,ஒருவர் மரணமடைந்த அன்றும் அந்த வீடுகளுக்குச் செல்லக்கூடாது;(இந்த 100 நாட்கள் வரையிலும்)

போகவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால்,அன்று முதல் ஐந்து நாட்கள் வரை இந்த மந்திரஜபத்தை தவிர்க்கவும்.

ஒரு குழந்தை பிறந்திருந்தால்,15 நாட்கள் கழித்தும்,ஒருவர் மரித்துவிட்டால்,அவர் மரித்த 16 ஆம் நாளன்றும் போய் சந்திக்கலாம்;அப்படி சந்தித்தால்,மூன்று நாட்கள் இந்த மந்திரஜபத்தை நிறுத்திவைக்கவும்.

ஆன்மீக ஆராய்ச்சியாளர்களையும்,கடவுள் இல்லையென்று நம்பும் நாத்திகவாதிகளையும்,கடுமையான நோய் அல்லது கடன் அல்லது துன்பத்தில் உழலுவோர்கள் இந்த மந்திரஜபத்தை ஆராய்ச்சிக்காக செய்து பார்க்கலாம்;

விரைவான,நிறைவான,அபரிதமான பலன்கள் வேண்டுவோர்,இந்த மந்திரஜபத்தை திரு அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லும்போது ஜபிக்க வெகுவிரைவான தீர்வு கிடைக்கும்;கிரிவலம் சாதாரண நாட்களிலும் செல்லலாம்;
சதுரகிரிக்குச் சென்று கோவிலின் சன்னதியில் ஒருநாள் முழுக்கவும் எதுவும் சாப்பிடாமல் (தண்ணீர் அருந்தலாம்) இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்கலாம்.
இப்படிச் செய்த அடுத்த சில நாட்களிலேயே உங்களது மாபெரும் பிரச்னைகள் தீர்ந்துவிடும்;அல்லது தீர்வதற்கான உதவிகள் கிடைக்கும்.

இந்த இரண்டு இடங்களுக்கும் செல்ல இயலாதவர்கள்,உங்கள் ஊரிலிருக்கும் சிவாலங்களில் தினமும் மேற்கூறியபடி ஜபம் செய்துவரவும்.அமாவாசை,பவுர்ணமி,தமிழ் மாதப்பிறப்பு,மாத சிவராத்திரி நாட்களில் மிக அதிக நேரமாக ஜபம் செய்யுங்கள்;நிம்மதியாக வாழுங்கள்;
இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை நமக்கு அறிமுகம் செய்துவைத்த திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கு உங்கள் சார்பாக எனது மனப்பூர்வமான நன்றிகள்.
Posted by aanmiga kkadal

No comments:

Post a Comment