Friday 28 December 2012

தியானம்

நம் மனதால் நம் உயிரை கவனிப்பதே தியானம் ஆகும். 
http://angelinmery.weebly.com/yoga.html கவன 
http://anbesivam2010.blogspot.in/2010/10/blog-post_03.html

 நமது எண்ண ஓட்டங்க்ளுக்கு ஏற்றவாறு, எண்ணற்ற கேள்விகள் தெரிந்தோ, தெரியாமலோ நமது மனதிற்குள் எழுந்தபடியே இருக்கும்.மனதை அறிவாற்றலை கடந்த நிலைக்கு நாம் செல்லவேண்டுமென்றால் நாம் நமது மூச்சுகாற்றை கவனிக்க துவங்கவேன்டும்.கவனித்தால் என்பது நமக்கும் இருக்கும் இயற்கையான குணம்.மூச்சு விடுவது ஒரு செயலாக எண்ணி செய்யக்கூடாது.காற்றை உள்ளே இழுப்பதும், வெளியே விடுவதும் நமக்கு தெரிந்து நடந்திடக்கூடாது.மூச்சுகாற்றை சுவாசிப்பதும்,வேளியேனுப்புவதும் தண்னிச்சையாக நடைபேற வேண்டும்.நம்முடைய இயற்கையான சுவாசத்தை கவனித்தல் மட்டுமே போதுமானது. இதுதான் முக்கியம்.இதுதான நம் எண்ணங்கள் சிதறாமல் இருக்க சிறந்த வழி.எண்ணங்களுக்கு பின் ஓடாதீர்கள்.கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் எண்ண அலைகளுக்கும் இடம் கோடுக்காதீர்கள்.எண்ணங்களை தவிர்த்துவிடுங்கள்.இயற்கையான சுவாசத்தை மட்டும் கவனத்தில் கோள்ளுங்கள். சுவாசத்துடன் மட்டுமே இருங்கள்.அப்போழுது, நமது எண்ண அலைகளின், அளவுகளின் குறையும். மெதுவாக நமது சுவாசத்தின் அளவு குறைந்து, சிறியதாகிவிடும்.இறுதியில் சுவாசத்தின் அளவு மிகவும் குறைந்த நம் புருவங்களுக்கு இடையே ஒரு ஒளி கீற்றை போல் திடப்படுத்திக்கொள்ளும்.இந்நிலையில் ஒருவருக்கு சுவாசமும் இருக்காது, எண்ணங்களும் இருக்காது.எண்ணங்கள் அற்ற நிலையில் இருப்பார். இந்த நிலையை தான் முழுமையான முக்தி நிலை என்றோ அல்லது “எண்ணங்கள் அற்ற நிலை” என்றோ கூறுகிறோம்.இதுதான் தியான நிலை.இந்த நிலையில் தான் பிரபஞ்ச சக்தி அருவிபோல் நம்முள் பாயும்.தியானம் அதிகமாக செய்வதன்மூலம் நமக்கு பிரபஞ்ச சக்தி அதீதமாக கிடைக்கப்பெறும்.பிரபஞ்ச சக்தி உடல் முழவதும் சக்தி வடிவத்தின் மூலமாக பாய துவங்கும்.இதை தெய்வீக வடிவம் என்றும் கூறலாம்.

தியானம் என்பது நல்ல விழிப்புணர்வுடன உறங்குவது.உறக்கத்தின் போழுது குறைந்தளவு தான் பிரபஞ்ச சக்தியை பெறமுடிகிறது.தியானத்தில் ஈடுபடும்போழுது அபரிதமான சக்தியை பெறமுடியும்.இந்த சக்தி நம்முடைய உடல், மனம் மற்றும் அறிவுத்திறனை பலமடநுகு விரிவடைய செய்கிறது.நம்முடைய “ஆறாவது அறிவின்” கதவை திறக்கவும் விரிவடையவும் இது  உதவுகிறது.தியானத்தின் மூலம் கிடைக்கபெறும் அதீதமான சக்தி நம்மை சந்தொஷப்டுத்தும். நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். முழு மனநிறைவுடன் காணப்படுவோம். மேலும் பல சிகரங்களை தொடசெய்யும்.தியானம் என்பது ஒரு பயணம். தியானத்தின்போழுது, நாம் உணரும் வகையில் நம் உடலிலிருந்து மனதிற்கு பயணிப்போம்.மனதிலிருந்து, அறிவாற்றலுக்கு அறிவாற்றலிலிருந்து நமக்குள் பின்பு அதையும் தாண்டி “தியானம்” பெற்றுகொள்ள முதலில் நம் உடல் மற்றும் மனம் சம்மந்தப்பட்ட செயல்களை நிறுத்தவேண்டும் அதாவது உடல் அசைவுகளையும் பார்ப்பது, பேசுவது, யோசிப்பது பொன்ற செயல்களையும்.  “தியானம்”செய்யும் முறை நாம் தெரிந்து கொள்ளலாம். தியானத்தின் போழுது நாம் முதலில் பார்க்க வேண்டியது நம் உடலை கட்டூப்படுத்தி ஒரே இடத்தில் அமர செய்வது.எந்த முறையிலும் அமர்ந்து கொள்ளலாம். நமக்கு சௌகரியமான முறையில்.அதே சமயத்தில் அசைவின்றி, ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வது முக்கியம்.தரையில் அமர்ந்துகொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்துகொண்டோ தியானம் மேற்கோளள்லாம் நமக்கு எந்த இடத்தில் அமர்ந்துகொண்டு தியானம் செய்ய வசதியா உளள்தோ அந்த இடத்தில் அமர்ந்துகோண்டு தியானம் செய்யலாம்.வசதியாக உட்கார்ந்து கொள்ளுங்கள்.கால்களை சப்பணமிட்டுக் கொள்ளுங்கள்.இரண்டு கைகளின் விரல்களை சேர்த்துக் கொள்ளுங்கள். கண்களை மெதுவாக மூடுங்கள்.அமைதியான நிலையில் சகஜ நிலைக்கு வாருங்கள்.உங்கள் முழு உடலையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.மனதையும் இலக்காக்கி கொள்ளுங்கள்.கால்களை பின்னி, விரல்களை கோர்த்த நிலையில் நமக்கு ஒரு சக்தி வடிவம் உருவாக்கப்படுகிறது.கண்கள்தான் நம் மனதின் கதவுகள். அதனால் கண்களை மூடிய நிலையில் இருத்தல் அவசியம்.


நம்முடைய உடல் முற்றிலும் சகஜநிலையில் இருக்கும்போழுது நமது உள்ளுணர்வு அடுத்த நிலைக்கு பயணம் செய்யும்.மனம் மற்றும் அறிவு நிலைக்கு மனம் என்பது பல எண்ணங்களின் கலவை.மன தளத்திற்குள், கணக்கற்ற எண்ணங்கள் வந்தவண்ணமே உள்ளது.



Thursday 27 December 2012

பொன்மொழிகள்

பொன்மொழிகள்
எ ஆ அ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
க ,கா ,கி கீ
கு கூ
கே கெ
கை
கோ
கொ
தகுதி
******
பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
வழி கிடைக்க வழி விடு
************************
    நீ மற்றவர்களுக்காக வழிவிட்டுக் கொடு, இறைவன் நிச்சயம் உனக்கு வழி விடுவான்.
 'கடன்காரன்'
****************
    நீ எப்போது யாருமற்ற ஏழை, எளியவர்களுக்கு உதவுகிறாயோ, அப்போது ஆண்டவன் உன்னிடம் 'கடன்காரன்' ஆகிறான்.
ஓய்வு
*******
ஓய்வு வாழ்க்கைக்கு அவசியம். ஓய்வின் மூலம் அடுத்த பணிக்கு நீங்கள் தயாராகலாம், அதற்காக உள்ளம் விரும்பாத ஓய்வை வலுக்கட்டாயமாக எடுத்தல் கூடாது.

மனச்சாட்சி
************
அடங்கி நடந்தால் எளிதில் தீங்கு செய்ய முடியாது.
திறமை
********
செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்.
உதவி
*******
உதவி செய்யமுடியாத அளவுக்கு யாரும் ஏழையல்ல, உதவி தேவைப்படாத அளவுக்கு யாரும் பணக்காரருமல்ல.

மனிதனுக்கு மட்டும்தான் சிரிக்கத் தெரியும், அதுபோல பிறர் சிரிக்கும்படி வாழவும் மனிதனுக்கு மட்டும்தான் தெரியும்.

எண்ணங்களை ஏலத்தில் விடுங்கள், ஏழைகளின் கண்ணீரைத் துடையுங்கள்.

வாழ்வில் தன்னம்பிக்கை, அடுத்து கடின உழைப்பு இரண்டும் இருந்தால் ஒரு நல்ல நிலையைக் கட்டாயம் அடையலாம்.

"என் சிறந்த தகுதி, என் தகுதிக்குறைவை நான் உணர்ந்திருப்பதுதான்".

கடின உழைப்பு என்ற மதிப்பு மிக்க சொத்தைத் தொடர்ந்து சளைக்காமல் செலவழியுங்கள். இதைத் தவிர வெற்றிக்கு உத்தரவாதம் தருவது வேறு எதுவும் அல்ல.
”சிறுவனாய் இருக்கும் போது பைக் கேட்டு பிரார்த்தனை செய்தேன். அப்புறம் தான் புரிந்தது கடவுள் அப்படி வேலை செய்கிறதில்லை என்று. ஒரு பைக்கை திருடி ஆண்டவனிடம் மன்னிப்பை கேட்டுக்கொண்டேன்” - எர்னோ பிலிப்ஸ்
”குழந்தை பிறந்த முதல் பன்னிரண்டு மாதங்கள் அது பேசவும் நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த பன்னிரண்டு மாதங்கள் அது ஓரிடத்தில் உட்காரவும் வாயை பொத்தவும் கத்துகிறோம்” - பிலிஸ் டில்லர்
”வேறு யாருக்கோ நடக்கின்றவரை எல்லாமே வேடிக்கை தான்” - வில் ரோஜர்ஸ்
”ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி.
மற்ற இரண்டும் ஞாபகமில்லை” - சர் நார்மன் விஸ்டம்
”பயனுள்ள பொய்யை விட, கேடு விளைவிக்கும் உண்மை நல்லது” - எரிக் போல்டன்
”குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாய் இருப்போர் எல்லோருமே ஏற்கனவே பிறந்துவிட்டதை கவனித்தீர்களா?” - பென்னி ஹில்
”நாற்பதோரு வருடமாய் ஒரே பெண்ணையே காதலித்து வருகிறேன். மனைவிக்கு தெரிந்தால் கொன்று போடுவாள்” - ஹென்றி யங்மேன்
”யாரை உங்களுக்கு தெரியும் என்பது முக்கியமில்லை, அதை எப்படி மனைவி கண்டு பிடித்து விட்டாள் என்பது தான் முக்கியம்” - ஜோயி ஆடம்ஸ்
”சாக பயமில்லை. ஆனால் அது நடக்கும் போது நான் அங்கிருக்கக் கூடாது” - வுடி ஆலன்
”உண்மையான நண்பன் உங்கள் தோல்விகளை கண்டுகொள்ளமாட்டான், வெற்றிகளை சகித்துக்கொள்வான்” - டக் லார்சன்
”பேரம் பேசக் கூட செலவாகும் என ஒரு பெண்ணை புரியவைத்தல் ரொம்ப கஷ்டம்” - எட்கர் வாட்சன் கோவ்
”நகைச்சுவை இருவரிடையே உள்ள தூரத்தை குறைக்கிறது” - விக்டர் போர்ஜ்

Monday 24 December 2012

PANJAKARPAM


தியானம் என்பது மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்தி புருவமத்தி அல்லது நாசிநுனியில் நாட்டம் வைத்து அதில் லயித்திருப்பதாகும்.

தலை முழுகும் விதி
கஸ்தூரி மஞ்சள், வெள்ளை மிளகு, கடுக்காய் தோல், நெல்லி முள்ளி, வேப்பம் பருப்பு வகைக்கு 1/4 பலம் ஆகியனவற்றை நிறுத்தெடுத்து முதல்நாள் இரவில் பசும்பாலில் ஊறப் போட்டு, மறுநாள் காலையில் பசும்பால் விட்டரைத்து சுமார் 1/4 படி பாலிற்கலக்கிக் கொதிக்க வைத்து சேறு பதத்தில் இறக்கி வைத்து சரீரமெங்கும் தேய்த்து 2 மணி நேரம் ஆன பின்பு தண்ணீர் கலக்காத இளவெந்நீரில் தலை முழுக வேண்டும். இதனால் கரப்பான்புண், அக்கினி மந்தம், மலபந்தம், கால்புற்று, காமாலை விஷங்கள், சோனித வாதம், உட்சூடு, சிரங்கு, கரப்பான், சுரம், சன்னி இவைகள் நீங்கும்.


ஓமம்

வாய் நாற்றம், குடல் நாற்றம், புளிப்பு வாடை இவைகளை அகற்றுவது, வயிற்றில் வாயுக்கட்டு, கபக்கட்டு, அடைப்பு, மலக்கட்டு இவைகளை அகற்றி குத்துவலி வேதனை, உப்புசம் இவைகளை ஜீரகம் போல மணப்பொருளாக இதையும் சமையலில் சேர்க்கிறார்கள். 
************************************************************************
*சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு
*****************************
ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் கருகாமல் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து ‘மிக்சியில்’ போட்டு அரைத்து வைத்துக் கொள்ளலாம். சாப்பிட்ட 20 நிமிடங்களுக்குப் பிறகு, ஒரு தேக்கரண்டி, குவியலாக, சாப்பிடலாம்.
சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை
ஓமம் போக்கும்.

உடல் சோர்வை போக்குவதில் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சுவாசக்கோளறுகள்,  இருமல் போன்ற நோய்களை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் போன்றவற்றையும் ஓமம் குணப்படுத்துகிறது.

ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.
ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும்.
சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்!.
தொப்பையை குறைக்க
தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்புன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும்.காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்காக கரைத்து குடிக்க வேண்டும்.இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.


 இடுப்பு வலி நீங்க:
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
பாவபிராகசர் குறிப்பிடுகையில் "ஓமம் காரம், உடலில் ஊடுருவிச் செல்லும் தன்மையுடது, பசியைத் தூண்டி கப வாதங்களை குறைக்கும், சூடானது, எரிச்சலைதூண்டும், இருதயத்திற்கு இதமானது, விந்துவை கூட்டி, பலத்தைக் கொடுத்து, லேசான தன்மையால் எளிதில் ஜீர்ணமாகும். கண் நோய், கபத்தினால் உண்டாகும் நோய்கள், வாந்தி, விக்கல் மற்றும் சீறுநீர் பையில் வலி ஆகியவற்றை நீக்கும் தன்மையுடையது" என்று குறிப்பிடுகிறார்.
குளிர்ச்சியான மோர் தயிர் முதலியவைகளை அப்படியே உபயோகிக்க முடியாத போது அவைகளில் ஓமத்தைத் தாளித்து அதன் குளிர்ச்சியைக் குறைப்பார்கள். மோர்க்குழம்பு, ரஸம் தயாரிக்கும் போது இதை வெடிக்கவிட்டுச் சேர்ப்பர். வயிறு சம்பந்தப்பட்ட நோய் அனைத்திற்குமான மருந்துகளில் ஓமத்திற்கு முக்கிய இடமுண்டு. ருசியின்மை, பசிமந்தம், வயிற்று உப்புசம், வயிறு இருகிக்கட்டிக் கொள்ளுதல், வயிற்றுவலி, கிருமியால் வேதனை இவைகளில் ஓமமும் உப்பும் சேர்ந்த சூர்ணம், ஓம கஷாயம், ஓமத்தீநீர் இம்மூன்றும் மிகவும் உதவக்கூடியது.
************
நிகண்டு ரத்னாகரம். 
பல் நோய்களுக்கும், குல்மம் எனப்படும் குடல் வாயு நோய்க்கும், விந்து வெளிப்படுகையில் ஏற்படும் வலியிலும் ஓமம் சிறந்த மருந்தாகும் என்று நிகண்டு ரத்னாகரம். 
**************************************************
ஓமத்தை சுட்டுக் கரியாக்கித் தூளாக்கி தேனில் 5-6 டெஸிக் கிராம் அளவு கொடுக்க வயிற்று வேக்காளத்துடன் குழந்தைகளுக்கு ஏற்படும் உஷ்ண பேதியில் மிகவும் நல்லது. 
*****************************************************************************
வீக்கம், வலி, தேள் கொட்டின கடுப்பு இவைகளில் ஓமத்தையோ, ஓம உப்பையோ (Thymol) ஜலத்தில் இழைத்து பத்துப்போட வேதனை குறையும்.
**************
வயிற்று உப்புசம், வலியில் ஓமத்தை அரைத்து பத்துப் போடுவதும், அதை வறுத்து ஒத்தடம் கொடுப்பதும் நல்ல குணம் தரும். 
*****************************
கீரிப்பூச்சி என்னும் கிருமி நோயில் வேப்பிலை கொழுந்தும் ஓமமும் அரைத்தும் ஜலம் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொடுப்பது உண்டு. .
***********************************************************
 ஓம உப்பை ஜலத்தில் கரைத்துப் புண்களை அலம்புவதால் புண்கள் சீக்கிரம் ஆறும். நாற்றமும் குறையும்.


யுனானி


jokes


மாப்பிள்ளை ஆட்டோ டிரைவர்னு
எப்படி கண்டுபிடிச்சீங்க ?'

'வரதட்சணைக்கு மேல ஐந்து ருபாய் போட்டுக்
கொடுங்கன்னு கேட்கிறாரே....!'

--------------------------------------------------------------------------------------

உங்க சம்சாரத்துக்கு நீங்க மரியாதை தர்ற மாதிரி அவங்க
உங்களுக்குத் தருவாங்களா ?'

'ம்...... ’அவ மரியாதை’ தருவா ?'

--------------------------------------------------------------------------------------

பையன் சூர்யா மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி
கல்யாணத்துக்கு சம்மதிச்சது தப்பா போச்சுடீ'

'என்னாச்சு டீ...'

'பேரழகன் சூர்யா மாதிரி இருக்கான்டி !'
--------------------------------------------------------------------------------------

உங்களை காதலிச்ச பிறகுதான் மற்ற
ஆம்பிளைங்க எவ்வளவு மோசன்னு தெரியுது டார்லின்ங்!'

--------------------------------------------------------------------------------------

போஸ்ட் மேனை காதலிச்சது தப்பாபோச்சுடி..

ஏன் என்னாச்சு..?

ரெஜிஸ்டர் கல்யாணம்தான் பண்ணிக்கனும்னு
அடம்பிடிக்கிறார்..
........................................................................................................

நடிகரெல்லாம் நாடாளா முடியுமா எனக் கேட்கும் எதிர்க் கட்சித் தலைவருக்கு சவால் விடுக்கிறேன்'

'நாங்கள் நாடாள்வது இருக்கட்டும் உங்களால் ஒரு பாட்டுக்கு அசினுடன் ஸ்பீடா டான்ஸ் ஆட முடியுமா?'

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்களை வச்சு படம் எடுத்ததுலே என்னோட சொத்துல பாதி அழிஞ்சு போச்சு சார்....

கவலைப் படாதீங்க. உங்களுக்கு இன்னொரு படத்துக்கு நான் கால்சீட் தர்றேன் !

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர்: ரஜினி மாதிரி வந்து காட்றேன்னு சொல்லிட்டு சென்னைபோன என் பையன் சொன்னமாதிரியே செஞ்சுகிட்டு இருக்கான்.

மற்றவர்: அப்படீன்னா ஹீரோ ஆயிட்டானா?

ஒருவர்: நீங்கவேற.....பஸ்ஸில கண்டக்டரா ஆயிருக்கான்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே?

வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.
...........................................................................................................................
ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'

'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'

'உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'

----------------------------------------------------------------------------------------------------------------

உங்களுக்கு தலைவளி இருக்கா ?

இருக்கு டாக்டர் ! வெளியேதான் வெயிட் பன்றா !

----------------------------------------------------------------------------------------------------------------

டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.....



(புதிதாய் பிறந்த குழந்தை நர்ஸிடம் பேசுகிறது...)

"நர்ஸ், ஒரு மொபைல் இருந்தா கொடுங்க."

"எதுக்குடா செல்லம்?"

"நான் சேஃப்டியா லேண்ட் ஆயிட்டேனு சொல்றதுக்கு கடவுள்கிட்ட மிஸ்டு கால் கொடுக்கணும்!!"

மதுப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவனின் மனைவி, தன் கணவனின் குடிப்பழக்கத்தை நிறுத்த எண்ணினாள்.

ஒரு நடு இராத்திரிப் பொழுதில் பேய்போன்று உடைகளை அணிந்து முகமெல்லாம் பயங்கரமான தோற்றத்தை அளிப்பது போன்று தன்னை அலங்கரித்தாள்.

பேய் போன்று தன்னை உருவகப் படுத்திக் கொண்ட மனைவியானவள் தன் கணவன் வரும் வழியிலுள்ள ஒரு மரத்தின் பின்னே ஒழிந்திருந்தாள்.

கணவன் வரும் பொழுதில் திடீரென்று அவன் முன்னிலையில் தனது பயங்கரமான தோற்றத்துடன் பாய்ந்து நின்றாள்.

எந்தவிதப் பயமும் இன்றிக் கணவன்: யார் நீ

மனைவி: நான் தான் பேய்!!

கணவன்: ஓ அப்படியா நல்லது என் கூட வீட்டுக்கு வா உங்க அக்கா ஒருத்தியை தான் நான் கல்யாணம் செஞ்சிருக்கேன் ..


(பேருந்து நடத்துனராக செந்தில் ஓட்டுனராக கவுண்டமணி)

செந்தில்: அண்ணே நான் மூணு தடவை விசில் அடிச்சும் ஏன் வண்டி நிக்கலை
கவுண்டமணி: டேய் பொறம்போக்கு.. நான் ஆறு தடவை பிரேக் அடிச்சே நிக்கலை..நீ விசில் அடிச்சா மட்டும் நின்னுடுமா


பேருந்தில் ரெண்டு பொண்ணுங்க ஒரு சீட்க்கு க்கு சண்டை போட்டு கிட்டு இருந்தாங்க.. யார் அமர்வது என்பதில் இருவருக்கும் வாக்குவாதம் ...
பேருந்து நடத்துனர் "யம்மா உங்கள்ல வயசுல மூத்தவங்க யாரோ அவுங்க உட்காருங்க "...


டாக்டர் என் மாமியாருக்கு இப்போ உடல்நிலை எப்படி இருக்கு ?

மெகா சீரியல் மாதிரி. ..

புரியலையே ?

இழுத்துக்கிட்டே இருக்கு

நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?

பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..

நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா....

நபர் 1: என்ன சார் சுவிட்ச் போர்டை தண்ணி உத்தி கழுவுரிங்க ஷாக் அடிச்சிடும்ல,,,,,???

நபர் 2: தம்பி நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா !!!!!!!

இந்தியன் கிரிக்கெட் அணியை வச்சி படம் எடுத்தா என்ன பெயர் வைப்பாங்க

"கிரிக்கெட்டில் சொதப்புவது எப்படி??"


வடிவேலு புதிதாக ஒரு மாருதி கார் வாங்கினார். அந்தக் காரில் தனது நண்பரைப் பார்க்க சென்னையில் இருந்து மதுரைக்கு கிளம்பினார். சில மணி நேரங்களில் போய் சேர்ந்து விட்டதாக தனது அம்மாவுக்குத் தகவல் அனுப்பினார். ஆனால் மூன்று நாட்கள் கழித்துத்தான் திரும்பி வந்தார்.

அம்மா கேட்டார்: என்ன ஆச்சு? இவ்வளவு லேட்டா வர்றே?

வடிவேலு: இந்த மாருதி கார் கம்பெனிக்காரங்களுக்கு கொஞ்சம்கூட விவரம் இல்லை. முன்னாடி போறதுக்கு 4 கியர் வச்சிருக்காங்க. அதனால் சீக்கிரம் போய் சேர்ந்துட்டேன். ஆனால் ஒரே ஒரு ரிவர்ஸ் கியர்தான் வச்சிருக்காங்க. அதுலே ஓட்டினா எப்படி சீக்கிரம் வரமுடியும்?


பில் கேட்சுக்கு சர்தார்ஜி எழுதிய கடிதம்

புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய சர்தார்ஜி, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக்கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் 'Start' பட்டன் உள்ளது. ஆனால், 'Stop' பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. 'Run' என்ற மெனு உள்ளது. எனது நண்பர் 'Run' ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ்பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு 'Sit' மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் 'Recycle bin'ஐ மட்டும்தான் பார்த்தேன். 'Re-scooter bin' இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில்ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. 'Find' பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத்தொலைத்தபோது, 'Find' பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் 'Microsoft word' கற்றுக் கொண்டான். இப்போது 'Microsoft sentence' கற்றுக்கொள்ள விரும்புகிறான்.அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் 'My Pictures' உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோஒன்றை அதில் போடவும்.

7. 'Microsoft office' உள்ளது. சரி, 'Microsoft Home' எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. 'My Network Places' கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, 'My Secret Places' கொடுக்கவில்லை. அதை இனிமேலும்தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்துகொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் 'Windows' விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் 'Gates' உள்ளது ஏன்?

இப்படிக்கு,

சர்தார்ஜி'


"ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?"

"பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.

உலகத்துல அருமையான நண்பர்கள் நம்ம கண்கள் தான்.
இரண்டும் ஒண்ணா தூங்குது...ஒண்ணா முழிக்குது..ஒண்ணா அழுவுது....
ஆனா ஒரு பொண்ண பார்த்தா மட்டும் ஒரு கண்ணு மட்டும் மூடி சிக்னல் கொடுக்குது இதிலிருந்து என்ன தெரியுது?

ஒரு பொண்ணு நினைச்சா, எப்படிபட்ட ஃப்ரெண்ட்ஸையும் பிரிச்சுடுவா..பீ கேர் ஃபுல்!


மயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது!

ஏன் அப்படி சொல்றே?

மயிலுக்கு தமிழ் தெரியாதே!


என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.

பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?

ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!

எங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு...

எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.

காட்டுங்க உங்க பர்ஸை !'

----------------------------------------------------------------------------------------------------------------

மூக்குல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணச் சொன்னா,
எலாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டீங்களே டாக்டர் !'

'என்ன மேடம் சொல்றீங்க ?'

'இழுத்தா.. ஒரு மீட்டர் நீளத்துக்கு வருது பாருங்க !'

----------------------------------------------------------------------------------------------------------------

அவர் போலி டாக்டர்னு எப்படிக் கண்டுபிடிச்ச?'

'சில்லறை இல்ல..தர வேண்டிய மீதி பாக்கிக்கு ஓரு ஊசி போடவான்ணு கேக்குறாரே!'.
பெண்கள் மொழி  

YOGA

விபரீதகரணி :
பொருள்:
விபரீதம் - தலை கீழ்
கரணி - செயல்பாடு  சற்றே விபரீதமான ஆசனம்
சிறப்பு - சர்வ ரோக நிவாரணி
செய்முறை:
நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்கவும் .
மேலே தூக்கும் போதே மூச்சை இழுத்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும். தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது.தாடை நெஞ்சில் பதிய வேண்டாம்.
கவனிக்க வேண்டிய சக்கரம்:
சொல்ல வேண்டிய மந்திரம்:
 வியாதிக்கு பயன்படுத்த வேண்டிய உணவு;
வியாதிக்கு பயன்படுத்த வேண்டிய மூலிகை:
இதயே எப்படி உங்கள் வெற்றிக்கு பயன் படுத்துவது?
தடை குறிப்பு:தொண்டி,தண்டுவட ஆபெரேஷன் செய்தவர்கள் செய்ய வேண்டாம்.
தீரும் நோய்கள்:
1.சர்க்கரை வியாதி
2.நோய் எதிர்ப்பு சக்த்யின்மை நீங்கும்
3.வெள்ளைப்படுதல்,மாத விலக்கு,மலட்டு தன்மை ,கர்ப்பை பை கோளாறு அகலும்
4.மார்பு நோய் ,ஆஸ்துமா,தொண்டை நோய் அகலும்
5. இடுப்பு,வயிறு,பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.    
6.கண்பார்வை கூர்மையாகும்
******************************************************************************

பச்சிமோத்தாசனம்
இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும். 


யோக முத்திரா
ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றன. நல்ல ஆரோக்கியத்தை எட்டுகின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பு தொடர்கிறது. முகத்தில் பொலிவும், தேஜசும் ஏற்படுகிறது. முக்கியமாக இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுந்துவதால் நீடித்த மலச்சிக்கலும் நீங்குகிறது.
“குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும்” என்பது தமிழ்வாக்கு. அதற்கேற்ப மலச்சிக்கலை நீங்கி மனச்சிக்கலையும் நீக்குவதால் யோக முத்திரா ஆசனங்களில் முத்திரை பதிக்கிறது. இந்த ஆசனம் எளிமையானது.
பத்மாசனத்தில் அமரவும். இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதிங்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக் கொள்ளவும். நிமிர்ந்து நேரே உட்காரவும். நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும். இப்போது மூச்சை விட்டுக் கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும். இப்படி இருக்கும் போது மூச்சை சௌகரியப்படி விடவும் வாங்கவும் செய்யவும். மூச்சை அடக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இந்த மாதிரி அவரவர்க்கு வேண்டியபடி மூன்று முதல் 7 தடவைகள் வரை செய்யலாம்.
இந்த ஆசனம் பார்ப்பதற்கு சுலபமாக தோன்றினாலும் செய்வதற்கு அவ்வளவு எளிதாக வந்து விடாது. சிலருக்கு என்ன செய்தாலும் மிகவும் அடிப்படையான ஆசனமான பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் நன்றாக செய்ய வரும் வரை, சாதாரணமாக அமரும் முறையில் சுகாசனத்தில் உட்கார்ந்து, இரண்டு முழங்கால்களுக்கு மேல் இரண்டு உள்ளங்கைகளை வைத்து அழுத்திக் கொண்டு, முன்னுக்கு குனிந்து மூக்கு தரையை தொட முயற்சிக்க வேண்டும். இரண்டு கைகளையும் பின்னுக்கு கட்டிக் கொண்டு தொடவும் முயற்சி செய்யலாம்.
அல்லது சுகாசனத்தில் இரண்டு பெருவிரல்களை கைகளால் பிடித்துக் கொண்டு முன்னுக்கு குனியவும் செய்யலாம். இவைகள் எல்லாம் பத்மாசனம் வராதவர்களுக்கு தான். ஆனால் இடையிடையில் பத்மாசனமும் போட்டு பழக வேண்டும். பிறகு முன் சொன்னது போல் பத்மாசனத்திலிருந்தே குனிய முயற்சி செய்ய வேண்டும். கைகளை குதிகாலின் மீது வைத்துக் கொண்டும் குனியலாம். கைகளை குதிகாலின் மேல் வைத்துக் கொண்டு குனிவது கடினமாக இருந்தால், பின்னுக்கு கைகளை கட்டிக் கொண்டு குனியலாம். சில நாட்களுக்கு பின் கைகளை குதிக்கால்களின் மேல் வைத்துக் குனியலாம். பத்மாசனம் போட்ட படி குனிவதால், கால்கள் ஒன்றை ஒன்று அழுத்தி முதலில் வலிக்கும். நாளடைவில் பழக்கமானால் வலி இருக்காது. சிலருக்கு முன்னுக்கு குனிந்து மூக்கைத் தரையைத் தொட முயற்சி செய்யும் போது பிருஷ்ட பாகம் தூக்கிக் கொள்ளும். அப்படி நேராமல் அழுத்தமாய் தரையில் உட்கார்ந்து பழக வேண்டும்.
சிலருக்கு தொடை பகுதி அதிக சதைகளுடன் மிகவும் பெரிதாக இருக்கும் போது அவர்கள் முன்குனிந்து தரையைத் தொட கடினமாக இருக்கும். சிலருக்கு வயிறு கொழுப்பு சேர்ந்து தொப்பை விழுந்து இருப்பதாலும் முன்குனிய முடியாது. அவர்கள் எல்லாரும் மற்ற ஆசனங்களுடன் யோக முத்திரவையும் முயற்சி செய்து வந்தால், நாளடைவில் வயிறு, இடுப்பு மற்றும் தொடை பகுதிகளில் உள்ள சதை, நரம்புகள் இளக்கம் பெற்று யோக முத்திரா செய்வதற்கு எளிதாகும். இந்த ஆசனம் செய்ய செய்ய தொப்பை பெருமளவு கரைந்து விடும். வயிற்றை சுற்றி உள்ள கொழுப்பு தான் சர்க்கரை நோய்க்கான அடிப்படை காரணம் என்று தற்போது சொல்கிறார்கள்.
இந்த வயிற்றை சுற்றிய கொழுப்பை யோக முத்திராவில் எளிதில் கரைத்து, தொப்பையை போக்கி மிகவும் இளமையுடன் காட்சியளிக்க முடியும். தொப்பை கரைவதால் மிகவும் சுறுசுறுப்பு வந்து சேரும். சிலர் ஒல்லியாய் இருப்பார்கள். இவர்களுக்கு தொப்பையும் இருக்காது. ஆனால் இவர்களுக்கும் யோக முத்திரா செய்ய சுலபமாக வராது. காரணம், இவர்களது முதுகுஎலும்பு கட்டை பாய்ந்து இருக்கும். அதாவது, குனிந்து நிமிரும் உடற்பயிற்சிகளே இல்லாத காரணத்தால் முதுகுஎலும்பு வளைய முடியாமல் கட்டை போன்று திடமாக காணப்படும். இவர்களும் தொடர்ந்து யோக முத்திராவை பயிற்சி செய்யும் போது நன்றாக வளைந்து தரையை தொட முடியும்.
யோக முத்திராவால் முதலில் மூக்கை வைத்து தரையை தொடுவதும்,பின்னர் வாயால் தரையை தொடுவதும் என்று நன்றாக பழக்கமான பிறகு அதே நிலையில் 20 எண்ணும் வரை இருக்க வேண்டும். யோக முத்திரா முழுமையான நிலையில் சாதாரணமாக மூச்சை இழுக்கவும், விடவும் செய்யலாம்.
குறிப்பு;
யோக முத்திராவை வழக்கமாய் செய்யும் பெண்கள் கர்ப்பனமானால் இரண்டு மாதங்கள் வரை தான் செய்ய முடியும். அதன்பின் கைகளை வயிற்றின் குறுக்கே வைக்காமல் 1 மாத கால அளவிற்கு செய்யலாம். இந்த காலத்திற்கு மேல் கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. மிகவும் முக்கியமாக கர்ப்ப காலத்தில் இந்த ஆசனத்தை பழகவே கூடாது. பத்மாசனத்தில் மட்டும் உட்காரலாம்.
யோகாவினால் எடைக் குறைக்க முடியுமா? மதியம் யோகா செய்யலாமா?

யோகா செய்வதற்கு உங்கள் உடலைத் தவிர எந்த உபகரணமும் தேவை இல்லை. யோகாவில்பிரதானமானது மூச்சுப் பயிற்சி. இதில் ரத்த ஓட்டம் சீராகும், மனம் தெளிவடையும், புத்தியில் விழிப்புணர்வு உண்டாகும். மனமும் உடலும் இணைவதுதான் யோகா. மற்ற பயிற்சிகளில் உடல் மிக விரைவாக இளைக்கும். ஆனால், பயிற்சியை நிறுத்தினால் முன்பைவிட அதிக எடை வர வாய்ப்பு உண்டு. யோகாவில் எடைக் குறைவது மெதுவாக நிகழும். ஆனால், ஆறுமாத யோகா பயிற்சியின் பலன் ஒன்றரை வருடம் இருக்கும். இடையில் யோகாவை நிறுத்தினாலும் எடை ஏறாது. இயற்கை நமக்கு 24 மணி நேரம் கொடுக்கிறது. நேரப் பகிர்வு அவசியம். முதல் நாள் இரவே மறுநாளுக்கு தேவையான காய்கறி, உடைகளை தயார் நிலையில் வைத்துவிட்டு விரைவாக படுக்கைக்குச் சென்றால், அதிகாலையில் விழிப்பு வரும். எழுந்ததும் யோகா செய்வது மிக நல்லது. இதனால் உடல், மனம், புத்துணர்வு அடைவதோடு, சுத்தமான காற்றும் கிடைக்கும். 20 நிமிட யோகா, 16 மணி நேரம் புத்துணர்ச்சியுடன் வைக்கும். 11 மணிக்கு வேலைகளை முடித்துவிட்டு யோகா செய்யலாம். ஆனால், 8.30-க்கு காலை உணவை முடித்திருக்க வேண்டும். மாலையும் நல்லது தான். மதியப் பயிற்சி வேண்டாம்
பெருங்காயம் 
ஆண்மைகுறைவால் மனதில் ஏற்பட்டிருக்கும் பெரும் காயத்தை ஆற்றவல்லது பெருங்காயம். வாசனைக்காக சமையலில் சிறிதளவில் சேர்க்கப் படுகிற பெருங்காயத்தில் இனிய விறு விறுப் பூட்டும், உணர்ச்சிப் பெருக்கேற்படுத்தும் ஆற்றல் உள்ளது. சிலருக்கு இந்த வாசனை பிடிக்காது என்பதால் சமையலில் சேர்க்கமாட்டார்கள். சமையலில் தொடர்ந்து பெருங்காயத்தை சேர்த்து பாருங்கள். ஆண்மை குறைபாட்டால் உங்கள் மன தில் நீண்ட நாட்களாக இருக்கும் “பெருங்காயம்”, பெருங்காயத்தால் ஆறிவிடும்.
ஏலக்காய்
ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட் டால் நல்ல பலன் தெரியும்.
ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால் எதிர்மறை விளைவிரகளை ஏற்படுத்தி ஆண்மை குறைவு பிரச்சனையை ஏற்படுத்தி விடும் என்று மூலிகை ஆராய்ச்சியாளர் கள் எச்சரிக்கின்றனர்.
மிளகு
மிளகு மிகவும் எளிதில் கிடைக்கக்கூடியது. மிளகு உணர்ச்சியைத் தூண்டி உத்வேகம் அளிக் கும் ஆற்றல் உள்ளது. பண்டைய கிரேக்கர்கள், ரோமனியர்கள் கூட உணவில் மிளகு சேர்த்து வந்தனர். அரேபியர்கள் பல்வேறு விதங்களில் மிளகை உட்கொண்டனர். நான்கைந்து மிளகு களைப் பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புகள் முறுக்கேறும், தாம்பத்யத்துக்கு முன்பு சில மிளகுகளை வாயில் போட்டு மென்று தின்றால் நல்ல பலன் கிடைக்கும்.
லவங்கம்
லட்டு போன்றவற்றில் லவங்கம் சேர்க்கப் படுவதுண்டு. பண்டைய சீனர்கள் இதன் பயனை நன்கறித்தனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பியர்களும் லவங்கத்தின் மதிப்பை நன்கு உணர்ந்திருந்தனர் 1642-ம் ஆண்டின் சுவிடன் நாட்டைச் சேர்ந்த மூலிகை விஞ்ஞானி லவங்கத் தைப் பற்றி எழுதியிருந்தார்.
பூண்டு
பூண்டுக்கு இல்லற சுகத்தை தரும் ஆற்றல் நிரம்ப உண்டு. அதன் மகத்துவத்தை எகிப்தியர்கள், கிரேக்கர்கள், ரோமனியர்கள், சீனா மற்றும் ஜப்பானியர்கள் நன்கு தெரிந்து வைத்திருந்தனர். சாப்பிட்டரத எளிதில் ஜீரணமாக்கி, பசியை உண்டாக்கும் ஆற்றல் பூண்டில் இருப்பதே அதன் பலம். பொதுவாக, ஜீரணமான பின்னரே, அதாவது சாப்பிட்டு ஒரு மணிநேரம் அல்லது அதற்குப் பிறகே உறவில் ஈடுபடவேண்டும் என்று கூறப் படு கிறது. அந்த பணியை பூண்டு எளிதில் செய்வதால், பூண்டை உட்கொண்டு உறவில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி
இஞ்சி சாப்பிட்டு வந்தால் கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக கொஞ்சி விளையாடலாம். இஞ்சிக்கு ஆண்மையைப் பெருக் கும் ஆற்றல் நிறையவே உண்டு. பண்டைய இலக்கி யங்களில் இஞ்சிச்சாறுடன், தேன் மற்றும் பாதி வேக வைக்கப்பட்ட முட்டையைக் கலந்து ஒரு மாதத்திற்கு சாப்பிட்டு வந்தால் மன்மதனை போல் செயல்படமுடியும் என்று எழுதப்பட்டுள் ளதே அதற்கு சான்று.
சாதிக்காய்
சாதிக்காயை அளவாகப் பயன்படுத்தினால், தம்பத்திய வாழ்க்கையில் மிகையான பலன்களை அனுபவிக்கலாம். சாதிக்காய், தேன், பாதி வேக வைத்த முட்டை ஆகிய மூன்று கலவையும் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கவல்லவை என்று மூலிகை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடல் உறவுக்கு முன்பே இந்த கலவையை சாப்பிட்டால், நீண்ட நேரம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்கின் றனர்.
ஓமம்
உணர்ச்சியைத் தூண்டும் ஓமத்தின் ஆற் றலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் அறிந்துள்ளனர். இதன் விதைகள் “தைமால்” என் னும் சத்து அதிகம். ஓமத்தை பொடியாக்கி வைத் துக் கொள்ள வேண்டும். பின்னர் புளியங் கொட்டையின் தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் பருப்பை (ஓம விதைக்கு சம அளவில்) பொடி செய்து, அதனை பொடி செய்த ஓமத்து டன் கலக்கி, நெய், வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் வதக்க வேண்டும். ஒரு ஸ்பூன் கல வையை பால் மற்றும் தேனுடன் கலந்து தாம்பத்ய முன் சாப்பிடலாம்.
வெங்காயம்முருங்கைபாதாம்
இது தவிர நாம் தினசரி உபயோகிக்கும் காய் கறிகள், தின்பண்டங்களில் கூட ஆண்மையை அதி கரிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளன. சிறிய வெங்காயத்தில் ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு. முருங்கை விதையில் ஆண்மையைப் பெருக்கும் “பென்-ஆயில்” உள்ளது. வல்லாரை இலையை துவையலாக செய்து சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை போன்றவற்றிலும் நரம்பை முறுக்கேற்றும் சக்தி அதிகமாக இருக்கிறது. வெற்றிலைக்கு ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் அமுக்கராகிழங்கை செக்ஸ் மன்னன் என்றே அழைக்கலாம்.
இது எல்லாம் கடையில் குறைந்த விலைக்கே கிடைக்கும் கடலை உருண்டைக்குக் கூட ஆண்மை யைப் பெருக்கும் மகத்துவம் உண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மேற்கண்டவற்றை தேவைக்கேற்றபடி முறையாக சாப்பிட்டு வந்தால் உங்கள் செக்ஸ் பிரச்சனைகள் பறந்தோடி விடும்.
(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

muthrai 10


பலன் தரும் பத்து முத்திரைகள்

03/08/2011
“முத்திரை (முத்ரா)” என்பது ஒரு சில மதங்களின் குறியீடாகவும், செய்கையாகவும் கூறப்படுகிறது. பெரும்பாலும் கை, விரல்களினால் செய்யப்பட்டாலும் முழு உடலை கொண்டும் முத்திரை காட்டப்படும். புத்தர் பல முத்திரைகளை கையாண்டிருப்பதை அவருடைய சிலைகளில் காணலாம்.
பரத நாட்டியத்தில் 200-க்கும் மேற்பட்ட முத்திரைகளும், மோகினி ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட முத்திரைகளும் கையாளப்படுகிறது. தாந்தீரிகத்தில் 108 முத்திரைகள் உள்ளன. அன்றாட நம் உடல் ஆரோக்கியத்திற்கு கீழ்க்கண்ட 10 முத்திரைகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

1. அறிவு முத்திரை:

ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் எண்டாக்ரின் சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் அழுத்தம் கொடுக்கும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும். இந்த முத்திரையை நின்ற நிலை, உட்கார்ந்த நிலை, படுத்த நிலையிலும் செய்யலாம். அறிவை கூர்மையாக்கி நினைவாற்றலை அதிகரிக்கும். தூக்கமின்மையை போக்கும். கோபம் குறையும்.

2. பூமி முத்திரை:

மோதிர விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். சோர்வை இது குறைக்கும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். சோர்வான எடை குறைந்தவர்களுக்கு உடல் எடை கூடும். மேனி அழகை கூட்டி பளபளப்பாக்கும். உடலை சுறுசுறுப்பாக்கி ஆரோக்கியத்தை நிலைப்படுத்தும்.
நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும் – மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வின்மையை இது நிவர்த்தி செய்யும். தினமும் இப்படி 40 முதல் 60 நிமிடங்கள் செய்து வந்தால் நோய் குணமாகும். காது வலியை 4 அல்லது 5 நிமிடத்தில் குணமாக்கும். காது கேளாதோர் மற்றும் மூளை பாதிக்கப்பட்டோர்க்கு இந்த முத்திரை உதவும். பிறவி நோயாக இருந்தால் பயன் தராது.

3. நீர் முத்திரை:

சின்ன விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியை தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். இது உடலில் உள்ள நீரை கட்டுப்பாட்டில் வைத்து நீர் குறைவால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யும். இதனை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஜீரண கோளாறு மற்றும் சதை பிடிப்புகள் வராது.

4. வாயு முத்திரை:

ஆள்காட்டி விரலை கட்டை விரல் அடியில் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை 24 மணி நேரத்தில் நிவர்த்தி செய்யும். தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும்.

5. சூன்ய முத்திரை:

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். உடல் சோர்வை இது நிவர்த்தி செய்யும். தினமும் 40 முதல் 60 நிமிடங்கள் செய்ய வேண்டும். காது தொடர்புடைய நோய்களை இந்த முத்திரை கட்டுப்படுத்தும்.

6. சூரிய முத்திரை:

மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி தரலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, ஜீரணமின்மை போன்ற குறைபாட்டை களைய வகை செய்யும்.

7. வாழ்வு முத்திரை:

சின்ன விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலால் அழுத்தவும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்பிற்கு வகை செய்யும். இந்த முத்திரையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும். சோர்வு நீங்கும். கண்பார்வை சிறப்பாகும்.

8. ஜீரண முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனியின் மூலம் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும். தினமும் குறைந்தது 45 நிமிடங்கள் பயிற்சி தரவும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல் போன்றவற்றை சீராக்கும்.

9. இதய முத்திரை:

நடு விரல் மற்றும் மோதிர விரல் நுனிகள் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். ஆள் காட்டி விரல் நுனி கட்டைவிரலின் அடியை தொட வேண்டும். சின்ன விரல் மட்டும் நேராக இருக்க வேண்டும். இது இதய நலத்துக்கு சிறந்தது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் இருமுறை தலா 15 நிமிடம் செய்தால் பலன் தெரியும்.

10. லிங்க சக்தி முத்திரை:

இரு கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்து கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் நேராகவும் வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும். இது உடலில் உஷ்ணத்தை தரும். எனவே இதை பயிற்சி செய்யும்போது நெய், அதிக நீர் மற்றும் பழ ரசம் பருகவும். இதை அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில் இந்த முத்திரை குளிர் காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். கபம் மற்றும் சளி போன்ற சுவாச சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த வல்லது.
இந்த முத்திரைகளை செய்து உங்களில் மாற்றம் ஏற்படுகிறதா என்று பாருங்களேன்!

ஆதார தரிசனம்.

ஊணவே வாசிதனை மூலந்தன்னில்
ஓமென்று தானிறுத்தி உறுதிகொண்டு
பேணவே யிங்கென்று மவுனம்பூட்டி
பெருமையுள்ள ஓங்அங்சிவய நமவென்று
தோணவே தினம்நூறு உருவேசெய்தால்
சுத்தமுள்ள சுழினையிலே நந்திகாணும்
பூணவே நந்தியுட பிரகாசங் கண்டால்
பொருந்திநின்ற ஆதாரஞ் சித்தியாமே.
ஆமப்பா ஆதாரஞ் சித்தியானால்
ஆதார தேவதைகள் அப்போகாணும்
ஓமப்பா வென்றபிரண வத்தினாலே
ஒளிவிளக்காய் நின்றதொரு சோதிகாணும்
வாமப்பால் நிறைந்த பூரணத்திலேதான்
மகத்தான சோதிபஞ்ச வர்ணமாக
தாமப்பா தன்னிலையில் தானேகாணும்
தண்மையுடன் கண்டதெல்லாம் சித்தியாமே.
ஓம் என்று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி “யிங்”என்று மௌனமாக இருந்து "ஓங் அங் சிவய நம" என்று தினமும் நூறு உரு தொடர்ந்து செபித்து வந்தால் சுழிமுனையில் நந்தியினுடைய பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் அதுவே ஆதார தரிசனம் என்கிறார்.
இந்த ஆதார தரிசனம் சித்தியானால் ஆதார தேவதைகள் கண்களுக்கு தெரிவார்களாம், தனிமையில் இருக்கும் போதெல்லாம் ஒளிவிளக்குப் போல் சோதி தென்படுமாம். அந்த சோதியானது பஞ்ச வர்ண நிறத்திலே இருக்குமாம். இந்த பஞ்சவர்ண ஒளி தென்படத் தொடங்கினாலே இத் தரிசனத்தில் முழுமையாக சித்தியானதாக கொள்ளலாம் என்கிறார் அகத்தியர்.

ஆத்ம தரிசனம்!, அறிவு தரிசனம்!. 


ஆத்மாவின் தெரிசனம்.
சித்தியுள்ள ஆதாரதெரிசனமுங் சொன்னேன்
சிவசிவா ஆத்துமாவின் தெரிசனத்தைக்கேளு
பக்தியுடன் கண்டமதில் அங்கெண்றூணி
பூரணமாய்வாசி தனைநிறுத்திக் கொண்டு
பக்தியுடன் சுழிமுனையில் வாசியேற
பாலகனே உங்கென்று மவுனம்பூட்டி
சுத்தமுடன் உங்கிலிநம் சிங்கென்று
சுருதிபெற தினம்னூறு உருவேசெய்யே.
செய்யப்பா உறுதிகொண்டு உருவேசெய்ய
செயமான திருவுருவாம் ஆதாரத்தில்
மெய்யப்பா சுழிமுனையின் பிரகாசத்தாலே
மெஞ்ஞான மூலவன்னி பிரகாசிக்கும்
மையப்பா மூலவன்னி பிரகாசத்தாலே
மந்திரகலை ஆத்துமா வென்றறிந்துகொண்டு
கையப்பா குவித்துனிதம் பணிந்துகொண்டால்
கருணைவளர் சீவாத்துமா கனியுந்தானே.
ஆதார தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் “அங்”என்று மூச்சை தொண்டையில் நிறுத்தி “உங்”என்று மௌனமாக இருந்து "உங் கிலி நம் சிங்" என்ற மந்திரத்தை தினமும் நூறு தடவை செபித்து வந்தால் சுழிமுனையில் மூலவன்னி பிரகாசம் தெரியுமாம். அப்படி தெரிந்தால் ஆத்மாவானது மந்திரக்கலையை உணர்ந்து அறிந்து கொள்ளும் என்கிறார்.
அப்போது கைகுவித்து வணங்கி பணிவுடன் மந்திரக்கலையை முழுவதுமாய் உணர்ந்து தெளிவு பெறவேண்டுமாம். அப்படி தெளிவடைந்ததும் சீவாத்துமா முழுமை அடைந்து தெளிவு பெறுமாம், இப்படியாக ஆத்துமாவின் தெரிசனம் சித்தியாகும் என்கிறார்.
ஆத்மாவின் தரிசனத்தில் சித்தியடைந்தவர்கள் அடுத்த தரிசனமான “அறிவு தரிசனத்தை” பயிலலாம் என்கிறார் அகத்தியர். வாருங்கள் அதைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதைப் பார்ப்போம்.

அறிவு தெரிசனம்.
தானென்ற ஆத்துமாவின் தெரிசனத்தைச் சொன்னேன்
சங்கையுடன் அறிவான தெரிசனத்தைக் கேளு
வானென்ற மூலமதில் உங்கென்றூணி
மவுனமென்ற பீடமதில் அங்கென்றிருத்தி
கோனென்ற விழியோகம் கொண்டுநல்ல
குறியறிய ஓம்நம சிவயவென்று
தேனென்ற ரசம்போலே உருவேசெய்தால்
தேவாதி தேவனென்ற பிர்மமாச்சே.
ஆச்சப்பா பிர்மமென்ற தார்தான் சொல்வார்
ஆதியென்ற சுழியினையிலே அக்கினியே தோன்றும்
பேச்சப்பா யிம்மூல வன்னிதன்னால்
பேரண்டம் சுத்திவர கெவுனமுண்டாம்
நீச்சப்பா வெகுநீச்சு மூந்நேயந்தம்
நிசமான அந்தமடா நெத்திக்கண்ணு
பாச்சப்பாக் கண்ணறிந்து வாசிகொண்டால்
பதிவான மவுனசித்து பலிக்குங்காணே.
முதல் இரண்டு தரிசனங்கள் சித்தியடைந்தவர்கள், “உங்” என்று மூச்சை மூலாதாரத்தில் நிறுத்தி “அங்” என்று மௌனமாக இருந்து கொண்டு “விழி யோகத்தில்” இருக்க வேண்டுமாம்.
அது என்ன விழி யோகம்?
கண்கள் மூடிய நிலையில் விழிகள் இரண்டினாலும் புருவ மத்தியை பார்த்தபடி இருப்பதுதான் விழி யோகம் எனப்படும்.
இந்த விழி யோக நிலையிலிருந்து கொண்டு "ஓம் நம சிவய" என்று தினமும் நூறு முறை செபித்துவந்தால் சுழிமுனையில் அக்கினி தெரியுமாம். அப்படி தெரிந்தால் கெவுனம் உண்டாகுமாம், அப்போது மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை உணரமுடியுமாம். இதை உணர்ந்து அறிந்து மூச்சை அங்கு நிறுத்த மௌன சித்தும் சித்திக்குமாம் இதுவே அறிவு தெரிசனம் என்கிறார் அகத்தியர்.

மனோ தரிசனம்
முதல் மூன்று தரிசனங்களாகிய “ஆதார தரிசனம்”, “ஆத்ம தரிசனம்”, “அறிவு தரிசனம்” ஆகிய மூன்று தரிசனங்களில் சித்தி அடைந்தவர்களே இந்த நான்காவது தரிசனமாகிய மனோ தரிசனத்தை பயில வேண்டும் என்கிறார் அகத்தியர்.
வாருங்கள், மனோதரிசனம் பற்றி அகத்தியரின் மொழியில் என்ன கூறியிருக்கிறாரென பார்ப்போம்.
கானென்ற அறிவான தெரிசனந்தான் சொன்னேன்
கலங்காத மனமென்ற தெரிசனத்தைக்கேளு
வானென்ற பூரகத்தில் சிங்கொன்றூதி
மகத்தான சுழியினையிலே வாசிபூட்டி
பூனென்ற ஓம்அரிநம வென்றேதான்
புத்தியுடன் தினம்னூறு உருவேசெய்தால்
வானென்ற தேகம்வெகு குளிர்ச்சியாகும்
மகத்தான ஆனந்த மயமாந்தானே.
தானென்ற ஆனந்தம் தானேதானாய்
தன்மையுடன் நின்றநிலை தானேகண்டு
வானென்ற கேசரியில் மவுனம்பூட்டி
வரிசையுடன் அண்டகேசரத்தில் சென்றால்
யேனென்ற மனோன்மணிதான் முன்னேநின்று
யின்பரச அமுர்தமது யிவாள்மைந்தா
வீணென்று தெரிசனத்தை விட்டாயானால்
வேதாந்த மவுனமதுக் குறுதிபோச்சே.
குருவருளை வேண்டி வணங்கி மௌனமாக இருந்து “சிங்”என்று மனதை பூரகத்தில் நிறுத்தி, மூச்சை சுழிமுனையில் நிறுத்தி "ஓம் அரி நம" என்று தினமும் நூறு முறை செபித்துவரவேண்டுமாம். அப்படி செபித்து வந்தால் உடல் குளிர்ச்சியாகுவதுடன், மனமானது மிகவும் ஆனந்த நிலையில் இருக்குமாம்.
இவ்வாறு மனம் ஆனந்த நிலையில் இருக்கும் போது கேசரியில் மௌன நிலையை கைக்கொண்டால் மனோன்மணித் தாயின் தெரிசனம் கிடைக்குமாம். மனோன்மணி தாயின் தெரிசனம் கிடைத்தவுடன் மனமானது அனைத்தும் சித்தித்ததாக எண்ணுவதுடன், இனி தெரிசனம் எதுவும் கிட்டதேவையில்லை, இதுவே இறுதி தரிசனம் என்றும் நினைக்கவும் தோன்றுமாம். இதுவே மனோ தரிசனம் சித்தியடைந்த நிலையாக கூறுகிறார்.
இந்த மனோ தரிசனமே போதும் என நினைத்து மிச்சமிருக்கும் தரிசன முறைகளை பயிலாமல் விட்டுவிட்டால் இது வரை பெற்ற நான்கு தரிசன சித்துக்களும் வீணாகி விடுமாம். எனவே பதினாறு தரிசனங்களையும் தொடர்ந்து பயின்று சித்தியடைவதே முக்திக்கு வழி என்கிறார் அகத்தியர்.

மௌன தரிசனம்
முதல் நான்கு தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த முறையினை பயில வேண்டும் என்கிறார் அகத்தியர். மௌன தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

உறுதியுள்ள மனமடங்குந் தெரிசனமுஞ் சொன்னேன்
உகந்துமன மடங்கினதோர் தெரிசனத்தைக்கேளு
பரிதிமதிமேற் சுடரறிந்து மவுனம்பூட்டி
பக்தியுடன் வாசிதனை வங்கென்றூணி
திருகுசுழி முனையதிலே சிங்கென்றோட்டி
தீர்க்கமுடன் தானிருந்து குருவைப்போற்றி
உறுதியுடன் சிங்குசிவாயென்றோத
உண்மையுள்ள மௌன தெரிசனமுமாமே.
ஆமப்பா தெரிசனத்தை யென்னசொல்வேன்
அதியென்ற தேகமதில் அக்கினிகொண்டேறும்
காமப்பால் கானப்பால் கனிந்தமுர்தமூறும்
கண்ணறிந்து மவுனமதாய் கனிவாய்நின்று
வாமப்பா லுருதியியனால் வரைகள்தாண்டி
மகத்தான சுழினைவழி வாசல்சென்று
தாமப்பா தனன்றிவே சாட்சியாக
தன்மயமும் விண்மயமும் தானாய்நில்லே.
இதுவரை சித்தியடைந்த தரிசனங்கள் மூலமாக சூரிய சந்திரர்களை விட சிறப்பான ஒளியை தரிசித்ததை மௌனமாக மனதில் உள்வாங்கி மூச்சை “வங்”என்று ஊன்றி, பின்னர் அந்த முச்சை சுழிமுனையில் “சிங்”என்று செலுத்தி குருவருளை வணங்கி வேண்டி "சிங்கு சிவா"என்று தினமும் நூறு முறை செபித்து வரவேண்டுமாம்.
இவ்வாறு தொடர்ந்து செபித்துவர உடலில் அக்கினி ஏறுமாம். அப்போது காமப்பால், கானப்பால், கனிந்தாமிர்தம் ஆகியவை ஊறுமாம். அப்போது அதை உணர்ந்து மௌனமாக இருந்தால், ஊறிய இம் மூன்றும் சுழிமுனை வாசல் வரை செல்லுமாம். அப்போது ஆகாயம், பூமி எங்கும் நீக்கமற பரந்து விரிந்து நிற்கும் பிரம்மம் நானே என்று உணரும் நிலை சித்திக்குமாம்.இதுவே மௌன தெரிசனமாகும் என்கிறார் அகத்தியர்.
உள்ளமென்ற தரிசனம்
சித்தர்கள் அருளிய ஆறாவது தரிசனமாகிய உள்ளமென்ற தரிசனம் பற்றி இன்று பார்ப்போம். முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டதைப் போல முதல் ஐந்து தரிசன சித்தி அடைந்தவர்களே இந்த உள்ளமென்ற தரிசனத்தை பயில வேண்டும். இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

நில்லென்று மனதடங்கும் தெரிசனமும் சொன்னேன்
நிசமான புலத்தியனே யின்னங்கேளு
ஊனென்ற உள்ளமதின் தெரிசனத்தைச் சொல்வேன்
உத்தமனே சற்குருவைத் தியானம்பண்ணி
சொல்லென்று வாசிதனை வங்கென்றெழுப்பி
தீர்க்கமுடன் உங்கென்று மவுனம்பூட்டி
செல்லென்று அங்கிலிவசி வசியென்றோத
துலங்குமடா மகேஸ்பரத்தின் தெரிசனந்தான்காணே.
காணவே மயேசரத்தின் தெரிசனந்தான் மைந்தா
கருணையுடன் காணவே அரிதாம்பாரு
பூணவே புருவமப்பா சுழினைக்குள்ளே
பொருந்திநின்று வந்ததொரு வாசிதானும்
தோணவே துலங்கி நின்று அசவையாகி
சொல்நிறைந்த மந்திரமு மதுவேயாக
ஊணவே மவுனமது குருதியாகி
உள்வெளியாய் நின்றுதடா உகந்துபாரே.
குருவருளைத் தியானம் செய்து மூச்சை “வங்” என்று ஊன்றி, பின் “உங்” என்று மௌனமாக இருந்து கொண்டு "அங்கிலி வசி வசி" என்று தினமும் நூறு முறை செபித்து வரவேண்டுமாம்.
அப்படி செபித்து வரும்போது காண்பதற்க்கு மிகவும் அரியதான மகேஸ்பரத்தின் தெரிசனத்தை காணலாமாம். அப்போது சுழிமுனையுடன் பொருந்தி வரும் மூச்சானது அதுவே மந்திரமாகவும், மௌன நிலையாகவும் உடலில் ஓடும் இரத்தம் போல் ஒன்றி உள் வெளியாய் இருக்கும் நிலையை உருவாக்குமாம்.
இதையே உள்ளமென்ற தெரிசனமாகும் என்கிறார் அகத்தியர்

பூரண தரிசனம், நாசி நுனி தரிசனம்!
பூரண தரிசனம்..
இது வரை பகிர்ந்து கொண்ட முதல் ஆறு தரிசனங்களை பெற்று சித்தியடைந்தவர்கள் இந்த ஏழாவது தரிசனமான பூரண தரிசனத்தை பயில வேண்டும். இந்த தரிசனம் பற்றி அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.
பாரப்பா உள்ளமென்ற தெரிசனந்தான்சொன்னேன்
பதிவான பூரணமாந் தெரிசனத்தைக்கேளு
நேரப்பா வங்கென்று வாசிதனையெழுப்பி
நிலையான சுழினையிலே அங்கென்றிருத்தி
காரப்பா ஓம்றீங் கிலிமங்கென்று
கருத்துறவே னூற்றெட்டு உருவே செய்தால்
தேரப்பா அண்டமெனும் சுழினைக்குள்ளே
தீர்க்கமுடன் சதாசிவனார் தெரிசனையாங்காணே.
காணவே அரிதாகும் தெரிசனந்தான் மைந்தா
கற்பூர தீபமதின் காந்திதன்னை
பேணவே மனம்பூண்டு காந்திதன்னால்
பேசாத மவுனரச பானமுண்டால்
தோணவே மவுனரச பானங்கொண்டால்
துலங்குமடா சிவயோகம் சுத்தமாக
ஊணவே தானிருந்து மவுனம்பூட்டி
ஓடிநின்று வாசியது ஒடுக்கமாச்சே.
“வங்” என்று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “அங்” என்று நிறுத்தி, மௌனமாக இருந்து "ஓம் றீங் கிலி மங்" என்ற மந்திரத்தை தினமும் நூறு முறை செபித்து வந்தால் சுழிமுனையில் சதாசிவனார் தரிசனம் காணக் கிடைக்குமாம். அப்படி தெரிந்தால் பூரண தெரிசனம் சித்தியாகுமாம்.
மேலும் இந்த தரிசனதில் கற்பூர தீபம் போன்ற ஒளியும் தென்படுமாம், அப்போது வாசியானது ஒடுக்கமாகுமாம். அத்துடன் மௌன ரச பானம் சுரக்கும் அதை உணர்ந்தால் சிவயோகம் தெளிவாகவும், முழுமையாகவும் சித்திக்குமாம் என்கிறார் அகத்தியர்.

நாசினுனி தரிசனம்..
சித்தர்களின் தரிசன வகைகளில் எட்டாவது தரிசனமான நாசி நுனி தரிசனம் பற்றி பார்ப்போம். இதை அகத்தியர் பின் வருமாறு விவரிக்கிறார்.

ஒடுக்கமுடன் பூரணமாம் தெரிசனத்தைச் சொன்னேன்
உண்மையென்ற னாசினுனி தெரிசனத்தைக்கேளு
அடுக்கநடு மனைதனில் வங்கென்றிருத்தி
ஆதியென்ற சுழிமுனையில் சிங்கென்றிருத்தி
தொடுத்துமிக சிவயவசி அம்மங்கென்று
சுத்தமுடன் னூற்றெட்டு உருவேசெய்தால்
நடுத்தமரில் னாகாந்த சோதிதொன்றி
நாலான காரியமும் நன்மையாமே.
நன்மையுடன் னாசினுனி னாட்டம்பாரு
நாதாந்த பூரணமாய் சுழினைக்கேத்தி
உண்மையென்ற வாசியிலே உகந்துநில்லு
தன்மையுடன் உலகமதில் தானேநின்று
சகலஉயிர் தாபரமும் தானேதானாய்
சின்மயமாய்த் தானிருந்து தெளிந்துகொண்டால்
சிவசிவா மவுனமது தீர்க்கமாமே.
புருவ மத்தியில் மனதை நிறுத்தி “வங்” என்று மூச்சை எழுப்பி சுழுமுனையில் “சிங்” என்று நிறுத்தி மௌனமாக கண்களால் நாசி நுனியை நோக்கியவாறு இருந்து "சிவயவசி அம் மங்"என்று தினமும் நூறு முறை செபித்துவந்தால் புருவ மையத்தில் காந்த ஜோதி தெரியுமாம். அப்படி தெரிந்தால் நாசினுனி தெரிசனம் சித்தியாகியதாக கொள்ளலாமாம்.
அப்படி நாசிநுனி தெரிசனம் சித்தியானால் சகல உயிர்களிலும் பரம்பொருளே நிறைந்திருக்கிறது என்றும், அந்த பரம்பொறுளிலில் தானும் அடக்கம் என்றும் உணர முடியுமாம். அத்துடன் மவுன சித்தும் சித்திக்குமாம் என்கிறார் அகதியர்.

புருவ மைய்ய தரிசனம்
இது வரை நாம் பார்த்த தரிசனங்களில் இருந்து கொஞ்சம் மாறுதலான தரிசனம் ஒன்றை இன்று பார்ப்போம். முந்தைய தரிசனங்களை நமக்கு வசதியான எந்த இடத்திலும் செய்யலாம். ஆனால் இந்த புருவ மைய்ய தரினத்தை சதுரகிரி மலையில்தான் செய்திட வேண்டுமென்கிறார் அகத்தியர். இதற்கான பிண்ணனி குறித்த தகவல்கள் ஏதும் குறிப்பாக இல்லை.
வாருங்கள் இந்த தரிசனம் பற்றி அகத்தியர் சொல்வதை பார்ப்போம்.
பாரப்பா நானினுனி தெரிசனமுஞ்சொன்னேன்
பரிவான புருவமய்யத் தெரிசனத்தைக்கேளு
நேரப்பா மனம்நிறுத்தி மவுனம்பூட்டி
நேர்மையடன் சுழினையிலே மனக்கண்சாற்றி
காரப்பா கனிந்தமனங் கொண்டு மைந்தா
கருணையுடன் நின்றுதவம் செய்தாயாகில்
மேரப்பா வளமானசதுரகிரி சென்றுதானே
மெஞ்ஞான சோதிசிவ சோதியாமே.

சோதியென்ற ஆதியடா சுழினைக்கம்பம்
சுயஞ்சோதி யானசிவ ஞானதீபம்
ஆதியென்ற தீபமடா ஆத்துமாவாகும்
நிலையான தீபமடா பரமாய்நிற்கும்
சாதியென்ற வன்னியடா ஆவிதன்னை
தனையறிந்து சோதியாம் தன்னில்சேரே
ஆரப்பா அறிவார்கள் ஆதியந்தம்
அடங்கிநின்ற பரசுரூபம் வெளிதானாச்சே.
சதுரகிரி சென்று மனதை ஒரு நிலைப்படுத்தி சுழிமுனியில் மனதை நிலை நிறுத்தி தவம் செய்திட வேண்டுமாம். அப்போது சிவ சோதி தரிசனம் காணலாமாம். இந்த சோதியுடன் தன்னை அறிந்து ஒரு நிலைப்பட்ட மனதையும் இணைக்க ஆதி அந்தம் தெரிய வருவதுடன், பரசு ரூபமும் தெரியவரும் என்கிறார் அகத்தியர்.
இந்த முறைக்கென மந்திரங்கள் ஏதும் குறிப்பிடப் படவில்லை, மாறாக முந்தைய தரிசனங்களில் கிடைத்த சித்தியானது இந்த தரிசனத்திற்கு உதவும் என கொள்ளலாம்.

பிரமவெளி தரிசனம். 

குருவின் வழி காட்டுதலோடு புருவ மைய தரிசனம் வரை சித்தியடைந்தவர்கள் இந்த பிரம வெளி தரிசனத்தை பயிலலாம். இந்த முறை பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

ஆச்சப்பா புருவநடு தெரிசனமும் சொன்னேன்
அரகரா பிர்மவெளி தெரிசனத்தைக்கேளு
பேச்சப்பா பெருகிநின்ற மூலந்தன்னில்
பிரணவத்தால் வாசிதனை மேலேனோக்கி
பாச்சப்பா மவுனமதில் ரீங்கென்றிருத்தி
பதிவான சுழிமுனையை பத்திப்பார்க்கில்
மூச்சப்பா நிறைந்ததிரு ஆறாதாரம்
முடிவில்லா பரமவெளி காந்தியாச்சே.

காந்தியென்ற பரமவெளி காந்திதன்னை
கனிவான கண்ணறிந்து ஆர்தான்காண்பார்
பாந்தியமாய் பரமவெளியை பதிவாயப்பார்த்தால்
பஞ்சவர்ண அஞ்சுநிலை தானேதோணும்
சாந்தமுடன் அஞ்சுநிலை தன்னைப் பார்த்தால்
தன்மயமும் விண்மயமும் அதுவாய்ப்போச்சு
நேர்ந்துமிக பூரணமாய் மவுனங்கொண்டால்
நிசமான மவுனகுரு னாதனாச்சே.
ஓம் என்ற பிரணவத்தின் உதவியுடன் மூச்சை மேல் நோக்கி செலுத்தி பின் மௌனமாக “ரீங்”என்று சுழுமுனையில் ஊன்றி மனக்கண்ணால் பார்த்தால் இந்த தரிசனம் சித்தியாகுமாம்.
அப்படி இந்த தெரிசனம் சித்தியானால் அப்ஞ்சவர்ணம் தெரிவதுடன், ஐந்து நிலைகளும் தெரியுமாம். அப்போது தன்மயமும் விண் மயமும் தானே என்று உணரும் மௌன நிலை சித்திக்கும் என்கிறார்.
இந்த மௌன நிலை சித்தித்தவர்களே மௌன குருவாக விளங்க முடியும் என்கிறார் அகத்தியர். ஆக, இதன் மூலம் மௌன குரு என்பவர் யார் அவரின் சிறப்பு எத்தகையது என்பதை இந்த தரிசன முறை நமக்கு உணர்த்துகிறது.

ஒளி தரிசனம், விந்து தரிசனம்.
தரிசனங்கள் என்பது ஒரு வகையான அனுபவ நிலை. அவற்றை வார்த்தைகளினால் விவரிப்பதை விட அனுபவித்து அறிவதே சிறப்பு. அனுபவம் என்பது முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும். ஆகக் கூடிய பொறுமை மற்றும் நிதானத்தோடு இவற்றை பயிலும் எவருக்கும் தரிசனம் சாத்தியம். இத்தகைய தரிசனங்களை பெற்றவர்களை நான் அறிவேன் என்பதால் இந்த கருத்தினை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
வாருங்கள் ஒளி தரிசனம் பற்றிய அகத்தியரின் பாடலைப் பார்ப்போம்.

ஒளி தரிசனம்..
ஆச்சப்பா பரமவெளி தெரினமுஞ்சொன்னேன்
அருள்நிறைந்த ஒளியினுட தெரிசனத்தைக்கேளு
காச்சப்பா அங்கென்று கண்டமதில்யிருத்தி
கருணைவளர் உச்சியிலே சிம்பென்றுரேசி
பாச்சப்பா யிப்படியே பிராணாயஞ்செய்தால்
பரமவெளி தன்னிலொளி பளீரெனவேதோணும்
மூச்சப்பா நின்றநிலை ஆரறியப்போறார்
முத்திகொண்ட சுழினையடா சந்தியந்தான்பாரே.
ஆதி தரிசனமான ஆத்மாவின் தரிசனம் துவங்கி பிரம தரிசனம் வரை வாய்க்கப் பெற்றவர்களே இந்த ஓளி தரிசனத்தை பயில வேண்டுமாம். கவனக் குவிப்புடன் மௌனமாய் இருந்து “அங்”என மனதை கண்டத்தில் நிலை நிறுத்தி மூச்சினை “சிம்” என உச்சியில் ஏற்றி பிராணயாமம் செய்திட வேண்டுமாம். அப்படித் தொடர்ந்து செய்து வருகையில் பரம ஒளியானது பளீர் என தோன்றும் என்கிறார் அகத்தியர். இதுவே ஒளி தரிசனம் ஆகும்.
இந்த ஒளி தரிசனத்தை தரிசிக்கப் பெற்றவர்கள் அடுத்த தரிசனமான விந்து தரிசனத்தை பயில வேண்டும். இதைப் பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.
விந்து தரிசனம்..
பாரப்பா ஒளியினிட தெரிசனமும் சொன்னேன்
பதவின விந்தினிட தெரிசனத்தைக்கேளு
சாரப்பா கேசரியில் மனதைனாட்டி
தமரான அணுவாசல் தன்னில்நின்று
நேரப்பா கண்ணடங்க மவுனம்பூட்டி
நேர்மையுடன் தானிருந்து றீங்கென்று
காரப்பா வாசியை நீமேலேனாக்கி
கருணையடன் சுழினையிலே நிசமென்றுநில்லே.
நில்லடா சிம்மெனவே வாசிகொண்டு
நிலையான தமரதிலே வாசியேத்து
வில்லடா விசைபோலே வாசியேத்து
விபரமுடன் யிறங்குதுறை அறிந்துகொண்டு
செல்லடா தமரதிலே நின்றுபார்த்தால்
சிவசிவா பூரணசந் திரனேகாணும்
உள்ளடா பூரணசந்திரனைக் கண்டால்
உறுதியுடன் சிருஷ்டிதிதி சங்காரமாமே.
குருவருளை தியானித்து மௌனமாக இருந்து கேசரியில் மனதை நிறுத்தி, “றீங்”என்று அணுவாசல் தன்னில் மூச்சை ஒன்று சேர்த்து மேல் நோக்கி செலுத்தி இறங்குதுறை அறிந்து பார்த்தால் பூரண சந்திரன் தென் படுமாம். இந்த பூரண சந்திரக் காட்சியைக் கண்டால் சிருஷ்டி, திதி, சங்காரம் என்னும் மூன்றும் சித்திக்குமாம் இதுவே விந்து தெரிசனம் என்கிறார் அகத்தியர்.

நாத தரிசனம்
அகத்தியர் அருளிய பதினாறு தரிசனங்களில் இனி வர இருக்கும் தரிசனங்கள் கொஞ்சம் சிக்கலானவை. அவற்றை வார்த்தைகளினால் எந்த அளவுக்கு விவரிக்க முடியுமென தெரியவில்லை. இவை பெரும்பாலும் குருவினால் சீடருக்கு உணர்த்தப் பட வேண்டியவை என்பதால் என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இந்த தரிசன விவரங்களை இங்கே பகிர முயற்சிக்கிறேன்.
வாருங்கள், விந்து தரிசனம் பற்றி அகத்தியர் அருளியிருப்பதை பார்ப்போம்.

ஆமப்பா விந்தினிட தெரிசனமுஞ்சொன்னேன்
அருள்பெரு நாதமதின் தெரிசனத்தைக்கேளு
தாமப்பா தன்னிலையை தானேகண்டு
சங்கையுடன் விபூதி தூளிதமேசெய்து
சோமப்பால் கொண்டுபரி பூரணமாய் நின்றால்
சொல்நிறைந்த சுவாசமது பாழ்போகாமல்
நாமப்பா சொல்லுகிறோம் மவுனம்பூட்டி
நாதாந்தத் தமர்வாசல் திரையைநீக்கே.
நீக்கியந்த கேசரியில் மனத்தைநாட்டி
நிலையறிந்து ஓம்வசியென்று மைந்தா
தாக்கிநின்றாய் ரேசகபூரண மாய்நிற்க
தன்மையுடன் வாசியது உண்மையாகும்
போக்குவரத் தாகிநின்ற வாசிமைந்தா
பொருந்தி நின்றதமரதிலே யடங்கினாக்கால்
வாக்குமன தொன்றாகி மனதுகூர்ந்து
மகத்தான கேசரியில் சோதியாமே.
தன் நிலையை தானே கண்டுணர்ந்து தெளிவாக வீபூதி துளிதம் செய்து பின்னர் மனதை பூரணமாக நிலை நிறுத்தினால் சுவாசம் வீணாக போகாது. அப்போது மௌனமாக“ஓம்வசி”என கேசரியில் மனதை நிலை நிறுத்த நாதாந்த தர்ம வாசலின் திரை நீங்கி தரிசனம் காண கிடைக்குமாம்.
அப்படி தரிசனத்தை காணும் போது கேசரியில் சோதி தோன்றுமாம். மேலும் இந்த தரிசனங்கள் படிக்கும் போது புரியாமல் இருந்தாலும் வரிசை முறைப்படி செய்து வரும் போது சிறப்பாக உணரமுடியும் என்றும் சொல்கிறார்.

உருவ தரிசனம், அரூப தரிசனம்
அகத்தியர் அருளிய பதிறாறு தரிசனங்களில் இன்று பதினான்கு மற்றும் பதினைந்தாவது தரிசனம் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம். இவை முறையே “உருவ தரிசனம்”, “அரூப தரிசனம்” என்றழைக்கப் படுகிறது.
உருவ தரிசனம்..
சோதியென்ற னாதாந்த தெரிசனமுஞ்சொன்னேன்
சுரூபமென்ற உருவமதின் தெரிசனத்தைக்கேளு
ஆதியென்ற கோமுகஆசான மேல்க்கொண்டு
அப்பனே விபூதி தூளிதமேசெய்து
நீதியென்ற வாமமதால் மவுனம்பூட்டி
நின்றிநிலை தமர்வால் திரையை நீக்கி
ஓதியதோர் பிரணவத்தால் உள்ளேசென்றால்
உள்ளொளியும் வெளியொளியும் மொன்றாய்ப்போமே.
ஒன்றாகி நின்றபொருள் தானேதானாய்
உத்தமனே அட்டசித்துந் தானேயாகும்
நன்றான ரவிமதியுஞ் சொன்னபடிகேக்கும்
நாட்டமுடன் யிகபரமும் நன்மையாகும்
நின்றாடும் வாசியினால் மவுனங்கொண்டு
நெறியான தமரதிலே வாமாகி
நேராத மவுனரசங் கொண்டாயானால்
குருவான தேசியடா வாசியாமே.
முந்தைய பதின்மூன்று தரிசனங்களில் சித்தியடைந்தவர்கள் மட்டுமே இந்த தரிசன முறையினை பின் பற்றி பயில வேண்டும். கோமுக ஆசனத்தில்* அமர்ந்து இருந்து கொண்டு வீபூதி துளிதமிட்டு கவனக் குவிப்புடன் ஆழ்ந்த மௌனமாக இருந்து பிரணவ மந்திரமான“ஓம்” என்ற மந்திரத்தை செபித்து வர உள் ஒளியும், வெளி ஒளியும் ஒன்றாக இணைவதை தரிசிக்கலாமாம். இதுவே உருவ தெரிசனம் என்கிறார் அகத்தியர்.
இத்தகைய உருவ தரிசனத்தை பெறுகிறவர்களுக்கு அட்டமா சித்துக்களும் சித்திப்பதுடன், இக பரமும் தெளிவாக விளங்கும் என்கிறார் அகத்தியர்.
*ஆசனங்கள் பற்றி சித்தர்கள் அருளிய தகவல்களை கூடிய விரைவில் விளக்கப்படங்களுடன் எழுதுகிறேன்.
அரூப தெரிசனம்..
உருவ தரிசனம் வரையிலான அத்தனை தரிசனங்களை பெற்றவர்கள் இந்த அரூப தரிசனத்தை பயிலலாம். இது பற்றி அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

வாசியென்ற உருவதுவே பொருளென்றெண்ணி
மனதுபரி பூரணமாய் பூசைசெய்து
தேசியென்ற அருவமதின் தெரிசனத்தைக்கேளு
திருகுமணி வாசிலிலே மவுனம்பூட்